அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு- அமைச்சர் பொன்முடி

சிண்டிகேட் கூடி முடிவெடுக்கும் வரை கட்டணம் உயராது என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.தேர்வு கட்டணத்தை உயர்த்துவது மாணவர்களை பாதிக்கும் என்பதால் நிறுத்தி வைப்பு.
அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு- அமைச்சர் பொன்முடி
Published on

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக் கூட்டண உயர்வு ந நிறுத்தி வைக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை கிண்டியில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிண்டிகேட் கூடி முடிவெடுக்கும் வரை கட்டணம் உயராது. தற்போது கட்டக்கூடிய தேர்வு கட்டணமே இனி நடைமுறையில் இருக்கும்.

தேர்வு கட்டணத்தை உயர்த்துவது மாணவர்களை பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com