திரைப்படத்தில் பெரியாராக வாழ்ந்து காட்டியவர் நடிகர் சத்யராஜ்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பொன்விழா ஆண்டு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.நடிகர் சத்யராஜ்க்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது.
திரைப்படத்தில் பெரியாராக வாழ்ந்து காட்டியவர் நடிகர் சத்யராஜ்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

முத்தமிழ் பேரவையின் பொன்விழா ஆண்டு விருது வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், நடிகர் சத்யராஜ்க்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது.

அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

எந்த பண்பாட்டு தாக்குதல் நடந்தாலும் தமிழ், தமிழினம், தமிழ்நாடு நிலைத்து நிற்க தமிழின் வலிமையும், நமது பண்பாட்டின் சிறப்பும்தான் காரணம்.

திரைப்படத்தில் பெரியாராக வாழ்ந்து காட்டியவர் நடிகர் சத்யராஜ்.

திராவிடமே தமிழுக்கு அரண் என பேசியவர் சத்யராஜ், தான் நடிகராக ஆனதற்கு கலைஞர் தான் காரணம் என கூறுபவர் சத்யராஜ்.

கலைஞர் பேசினாலே அதில் இசை, நயம் இருக்கும். கலைஞர் பொதுக் கூட்டங்களில் பேசும்போது நாடக தமிழை பார்க்கலாம்.

இசையிலும் தமிழ் ஒலிக்க வேண்டும். எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழிக்கு உண்டு.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com