நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட நபர் உயிரிழப்பு

சிக்கன் ரைஸில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்ததால் உயிரிழப்பு.உயிரிழந்த முதியவரின் குடும்பத்தினரிடம் நாமக்கல் போலீசார் தீவிர விசாரணை.
நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட நபர் உயிரிழப்பு
Published on

நாமக்கல் மாவட்டத்தின் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஓட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் எருமப்பட்டி அருகே உள்ள கொண்டிச்செட்டிபட்டி தேவராயபுரத்தை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பகவதி (20) இந்த ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உள்ளார்.

தொடர்ந்து 7 சிக்கன் ரைஸ் பொட்டலம் வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றார். அவற்றை தன்னுடைய தாய் நதியா (37), தம்பி கவுசிக் ஆதி (18), தாத்தா சண்முகம் (67), பாட்டி பார்வதி (63), சித்தி பிரேமா (35) மற்றும் இவரது இரு குழந்தைகளுக்கு வழங்கி உள்ளார்.

இதில் சிக்கன் ரைஸ் உணவை சாப்பிட்ட நதியா, சண்முகம் ஆகியோருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிக்கன் ரைஸில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்ததால் உயிரிழந்ததாக பரபரப்புத் தகவல் வெளியானது.

உயிரிழந்த முதியவரின் குடும்பத்தினரிடம் நாமக்கல் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com