கனமழை எதிரொலி: 2 ரெயில் நிலைய பார்க்கிங்கை பயன்படுத்த வேண்டாம்- மெட்ரோ நிர்வாகம்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக மாறியது.புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்கிறது.
கனமழை எதிரொலி: 2 ரெயில் நிலைய பார்க்கிங்கை பயன்படுத்த வேண்டாம்- மெட்ரோ நிர்வாகம்
Published on

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக மாறியது.

இது, புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்கிறது.

இதனால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கனமழை எச்சரிக்கையால், சென்னை அரும்பாக்கம், பரங்கிமலை மெட்ரோ ரெயில் பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கனமழை பெய்யும்போது மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, மெட்ரோ ரெயில் பார்க்கிங்கில் இன்று மாலை முதல் நாளை மாலை வரை வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com