என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகம் முழுவதும் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
- கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி ஜெயந்தி சென்னை காவல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- சேலம் சரக டிஐஜி உமா விழுப்புரம் சரக டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டள்ளனர். 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
* சென்னை தலைமையக டிஐஜி மகேஷ்குமார் தமிழக கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி ஜெயந்தி சென்னை காவல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* நாகை எஸ்.பி. அருண் கபிலன் சென்னை தலைமையக துணை ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* குடிமை பொருள் வழங்கல் துறை மதுரை மண்டல எஸ்.பி. செல்வகுமார், நாகை எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* விழுப்புர சரக டிஐஜி திஷா மிட்டல் சென்னை மேற்கு மண்டல இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* சேலம் சரக டிஐஜி உமா விழுப்புரம் சரக டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* தாம்பரம் மத்திய குற்ற பிரிவு துணை ஆணையர் பிரபாகர் சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தேனி ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்யா பதவி உயர்வு பெற்று சேலம் நகர் தெற்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* குளச்சல் ஏஎஸ்பி சாமுவேல் பிரவீன் கவுதம் திருப்பூர் நகர் வடக்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* நாங்குநேரி ஏஎஸ்பி பிரசன்னா குமார் பதவி உயர்வு பெற்று நெல்லை மேற்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.






