பாபநாசம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

பாபநாசம்:

பாபநாசம் அருகே தேவராயன்பேட்டை கீழத் தெருவில் வசித்து வந்தவர் அன்பழகன் மகன் தங்கதுரை (வயது 18). இவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கூடாரத்தில் மாட்டிற்கு கட்டும் கயிறு மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

இதுகுறித்து அவரது தாயார் ராணி பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர்கள் இளமாறன், சேகர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். எதற்காக தங்கதுரை தற்கொலை செய்தார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com