சிதம்பரத்தில் வாலிபர் தற்கொலை

சிதம்பரத்தில் காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

சிதம்பரம்:

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சுரேஷ் சிங் (வயது 20). இவர் தற்போது சிதம்பரம் மேட்டு தெருவில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள கவரிங் கடையில் வேலை பார்த்து வந்தார். சுரேஷ் சிங் தனது ஊரில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த சுரேஷ்சிங், சம்பவத்தன்று சயனைடு தின்றார். 

இதில் மயங்கிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுரேஷ் சிங் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்த புகாரின்பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com