சிங்கப்பெருமாள் கோவில் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

சிங்கப்பெருமாள் கோவில் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் கதிரவன் (வயது 35). இவர் சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். 

இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருக்கச்சூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்த கதிரவன் தனது பிரச்சினைகள் பற்றி உறவினர்களிடம் கூறிவிட்டு திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த கதிரவன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com