திருப்புவனம் அருகே இளம்பெண் மாயம்

திருப்புவனம் அருகே வங்கிக்கு சென்ற இளம்பெண் வீடு திரும்பாதது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாயம்
மாயம்
Published on

திருப்புவனம்:

பூவந்தி அருகே உள்ள ஏனாதி கிராமத்தை சேர்ந்தவர் கருப்புச்சாமி. கொத்தனார். இவரது மனைவி ரம்யா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 

இந்த நிலையில் ரம்யா அருகில் உள்ள வங்கிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் ரம்யாவின் தந்தை பெரியாம்பிள்ளை பூவந்தி போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com