கந்திகுப்பம், தேன்கனிக்கோட்டை பகுதியில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை

கந்திகுப்பம், தேன்கனிக்கோட்டை பகுதியில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள வெற்றிலைதோட்டத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 59). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதை அவரது மகன் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்தோணிசாமி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.

அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அந்தோணிசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அந்தேவனப்பள்ளியை சேர்ந்தவர் குமார் (38). கார் டிரைவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. சம்பவத்தன்று அவரது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார். அவர் பணம் கொடுக்க மறுத்து மது குடிப்பதை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த குமார் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com