கே.வி.குப்பம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

கே.வி.குப்பம் அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

கே.வி.குப்பம்:

கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் நேரு, விவசாயி. இவரின் மனைவி சுகன்யா (வயது 37). இவர்களுக்கு 17 மற்றும் 15 வயதுகளில் மகள்கள் உளளனர். சுகன்யா கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வீட்டின் படுக்கை அறையில் தூக்குப்போட்டுக் கொண்டார். குடும்பத்தினர் மீட்டபோது சுகன்யா இறந்து கிடந்தார்.

இது குறித்து கணவர் நேரு கே.வி.குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் கே.வி.குப்பம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து சுகன்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com