வில்லியனூரில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

வில்லியனூர்:

வில்லியனூர் வசந்தம் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பூமிநாதன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சிவலட்சுமி (வயது 25). பூமிநாதனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவு பூமிநாதன் மது குடிக்க சிவலட்சுமியிடம் பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சிவலட்சுமி வீட்டில் உள்ள ஊஞ்சல் கொக்கியில் தூக்குப்போட்டு தொங்கினார். 

இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே சிவலட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com