கோப்புப்படம்
கோப்புப்படம்

குருபரப்பள்ளி அருகே மாடு மேய்த்த பெண்ணிடம் நகை பறிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே மாடு மேய்த்த பெண்ணிடம் மிளகாய் பொடி தூவி நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

குருபரப்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அடுத்த சாமந்த மலையை சேர்ந்தவர் வடிவேலு. இவரது மனைவி பத்து (வயது 45).

இந்த நிலையில் நேற்று பத்து, தனது மாடுகளை மேய்ச்சலுக்காக வயல் பகுதிக்கு அழைத்துச் சென்றிருந்தார். அப்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க முகமூடி அணிந்து இருந்த 2 நபர்கள் திடீரென பத்து மீது மிளகாய் பொடியை தூவி தாக்கினர். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

பின்னர் அவர் காதில் அணிந்திருந்த தங்கத்தோடு மற்றும் காலில் அணிந்திருந்த கொலுசுகள் மர்ம கும்பல் எடுத்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதன் மதிப்பு ரூ.25 ஆயிரம் ஆகும்.

இந்த சம்பவம் பற்றி குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது உறவினர்கள் மணி, பெருமாள் ஆகியோர் முன்விரோதம் காரணமாக நகை பறிப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com