விராலிமலையில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்- வாலிபர் பலி

விராலிமலை அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

விராலிமலை:

விராலிமலை சன்னதி தெருவை சேர்ந்தவர் விவேகானந்தம். இவரது மகன் காத்தவராயன்(வயது 24). இவர் விராலிமலை அருகே உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் விராலிமலை கடைவீதிக்கு வந்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சிறிது தூரம் சென்றபோது எதிரே சிமெண்டு ஏற்றி வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், படுகாயம் அடைந்த காத்தவராயனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து லால்குடியை சேர்ந்த லாரி டிரைவர் செல்வராஜ் (51) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com