வில்லியனூர் அருகே மளிகை கடையில் பணம் திருட்டு

வில்லியனூர் அருகே மளிகை கடையில் பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் திருட்டு
பணம் திருட்டு
Published on

வில்லியனூர்:

வில்லியனூர் அருகே உள்ள மணவெளி கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது 42). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை மூடிச்சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த ரூ.60 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் பொருட்கள் திருடு போயிருந்தது. இது குறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் விமல்ராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மளிகை கடையில் திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com