வெம்பக்கோட்டை அருகே மது விற்றவர் கைது

வெம்பக்கோட்டை அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

தாயில்பட்டி:

வெம்பக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து பணிக்காக சென்றார். அப்போது அங்கு மீனாட்சி புரத்தை சேர்ந்த ரவிச்சந்திர ராஜா (வயது 46) என்பவர் அனுமதியின்றி மதுவிற்று கொண்டு இருந்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com