வேலாயுதம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு

வேலாயுதம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருட்டு
திருட்டு
Published on

வேலாயுதம்பாளையம்:

வேலாயுதம்பாளையம் காந்திநகர் 8-வது தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 24). இவர் இந்து முன்னணி ஒன்றிய துணை தலைவராக உள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளை பழைய தீயைணப்பு நிலையம் முன்பு நிறுத்தி விட்டு, அரவக்குறிச்சி சென்று விட்டு வந்து பார்த்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஹரிஹரன் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com