வந்தவாசியில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது

வந்தவாசியில் மோட்டார் சைக்கிள் திருடனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

வந்தவாசி:

வந்தவாசி கோட்டை புதிய காலனியை சேர்ந்தவர் ரபேல். இவர் தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்தார். காலை எழுந்து வெளியே வந்தபோது அதனை யாரோ திருடிச்சென்றிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் வந்தவாசி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வந்தவாசி கே.எஸ்.கே.நகர் மாபாஷா என்பவர் மகன் அப்துல் அமீது (வயது 24) சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

போலீசாரை பார்த்ததும் அந்த நபர் தப்பிச் செல்ல முயற்சி செய்தார் போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தபோது ரபேல் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை திருடியதை ஒத்துக்கொண்டார். இவர் ஏற்கெனவே வேறொரு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியில்வந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்துல்அமீதுவை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com