ஊத்தங்கரை அருகே கல்லூரி மாணவி கடத்தல்

ஊத்தங்கரை அருகே கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. 

இது குறித்து அவரது பெற்றோர் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தனர். அதில் ஊத்தங்கரை நாராயணன் நகரை சேர்ந்த சேட்டு (38) என்பவர் தனது மகளை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com