இறால் பண்ணையில் வயர் திருடிய 2 பேர் கைது

இறால் பண்ணையில் வயர் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

கோட்டைப்பட்டினம்:

மீமிசல் அருகே உள்ள உப்பளம் பகுதியில் தனியார் இறால்பண்ணை உள்ளது. இங்குள்ள மோட்டார் அறையில் இருந்த காப்பர் வயர்களை திருடி கொண்டு இருந்தனர். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் மீமிசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து வயர்களை திருடிக்கொண்டிருந்த மணமேல்குடி ராஜா தோப்பு பகுதியைச் சேர்ந்த முனியன் (வயது 27) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com