உடையார்பாளையம் அருகே விவசாயியை தாக்கிய வாலிபர் கைது

உடையார்பாளையம் அருகே விவசாயியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள கோடியால் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 42). விவசாயி. இவருக்கும், கடுவெட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த முத்தரசன்(26) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் முத்தரசன் தகாத வார்த்தையால் திட்டி, செந்தில்குமாரை தாக்கினார். இதில் செந்தில்குமார் படுகாயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து செந்தில்குமார் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து முத்தரசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com