திருப்பூர் அருகே ரெயிலில் அடிபட்டு பெண் பலி

விஜயமங்கலம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 45 வயது பெண் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

திருப்பூர்:

விஜயமங்கலம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 45 வயது பெண் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இது பற்றி அறிந்ததும் திருப்பூர் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். 

இதில் இறந்தவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அண்ணாநகரைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் மனைவி துளசிமணி (வயது 45) என்பது தெரியவந்தது. தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவர் ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது.

இது குறித்து திருப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com