தா.பழூர் அருகே மொபட் மீது பஸ் மோதி பெண் பலி

தா.பழூர் அருகே துக்க வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது மொபட் மீது பஸ் மோதியதில் பெண் பரிதாபமாக இறந்தார்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் வக்காரமாரி பகுதியை சேர்ந்தவர் மதிவாணன். இவருடைய மனைவி பங்கஜம்(வயது 58), மகன் நடராஜன். இந்நிலையில் பங்கஜம், நடராஜனுடன் பந்தநல்லூர் அருகே உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார்.

பின்னர் அவர்கள் ஊருக்கு மொபட்டில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். கோடாலிகருப்பூர் கிராமத்தில் வந்தபோது சாலை வளைவில் வேகமாக வந்த தனியார் பஸ், மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பங்கஜம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

நடராஜன் பலத்த காயமடைந்து, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் அங்கு சென்று, பங்கஜத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய பெண் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com