தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான இடைக்கால அறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை குழு சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கியது.
ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்
ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்
Published on

சென்னை:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கான, கால அவகாசம் வருகிற 22-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

இந்நிலையில், அருணா ஜெகதீசன் ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு, அதாவது அடுத்த ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com