அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேர் கைது

தாயில்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

தாயில்பட்டி:

தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த கோட்டையூர் பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது தவிட்டு ராஜ் (வயது 40) என்பவரது வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவரை கைது செய்து அவரிடம் இருந்த 20 கிலோ சரவெடிகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் வெற்றிலையூரணியில்‌ நடைபெற்ற சோதனையில் பிச்சைக்கனி (40), தமிழ்செல்வன் (45) ஆகியோரிடமிருந்து 25 கிலோ சரவெடிகளையும் வெம்பக்கோட்டை போலீசார் கைப்பற்றி அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

அதேபோல வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வேலுசாமி தாயில்பட்டி பஸ்ஸ்டாப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த வெற்றிலையூரணியை சேர்ந்த பிரேம்நாத் (55) கையில் இருந்த சாக்கு பையை சோதனையிட்டபோது 10 கிலோ சரவெடியும், கலைஞர் காலனியை சேர்ந்த கருப்பசாமியிடம் (வயது 48) 15 கிலோ சரவெடியும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சரவெடிகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com