தொப்பூர் அருகே மது விற்ற பெண் கைது

தொப்பூர் அருகே மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளியை அடுத்த கெட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சவுந்தர்யா (வயது 40). இவர் மதுபானங்களை பதுக்கி சட்டவிரோதமாக விற்பதாக தொப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தொப்பூர் போலீசார் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு நேரில் சென்று சவுந்தர்யா வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் மதுபாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சவுந்தர்யாவிடமிருந்து 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com