திருக்கனூர் அருகே பெண் தற்கொலை

திருக்கனூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

திருக்கனூர்:

திருக்கனூர் அருகே வாதானூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 52). விவசாயி. இவரது மகன் ஹேமமாலினி (23) எம்.எஸ்சி., பட்டப்படிப்பு முடித்து வீட்டில் இருந்து வந்தார். இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஹேமமாலினி சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், ஹேமமாலினியை மீட்டு மண்ணாடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஹேமமாலினி பரிதாபமாக இறந்துபோனார். இது குறித்து திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com