மழையால் சேதமடைந்து பல்லாங்குழியான திருபுவனை- சன்னியாசிக்குப்பம் சாலை

திருபுவனை - சன்னியாசிக்குப்பம் சாலையை விரைவில் சீரமைக்கவேண்டும் என்று பொதுமக்கள், தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சாலை குண்டும், குழியுமாக உள்ளதை படத்தில் காணலாம்.
சாலை குண்டும், குழியுமாக உள்ளதை படத்தில் காணலாம்.
Published on

திருபுவனை:

திருபுவனை சுற்றுப்பகுதியில் பல தனியார் தொழிற்சாலைகள், கம்பெனிகள் உள்ளன. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது பெய்து வரும் தொடர் மழையால் இங்குள்ள பிரதான சாலைகள், குறுக்கு சாலைகள், நகர் பகுதி சாலைகள், தெருக்கள் சேதமடைந்துள்ளன. பல சாலைகளில் ஜல்லி கற்கள் பெயர்ந்து வாகனங்களின் டயர்களை பதம் பார்த்து வருகின்றன.

அந்த வகையில் திருபுவனை- சன்னியாசிக்குப்பம் தார் சாலை, மழையால் சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டு பல்லாங்குழியாக காட்சியளிக்கின்றன. இந்த வழியாக வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இருசக்கர வாகனங்களில் செல்லும் போது சர்க்கஸ் காட்சிகளை நினைவுபடுத்துவது போல் உள்ளது.

மழை தண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளங்களின் தன்மை தெரியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். இரவு நேரத்தில் செல்பவர்களின் நிலை இன்னும் மோசம். தொழிற்சாலைகளுக்கு வந்து செல்லும் வாகனங்களும் பழுதாகின்றன. இந்த அவலத்தை போக்கும் வகையில் திருபுவனை - சன்னியாசிக்குப்பம் சாலையை விரைவில் சீரமைக்கவேண்டும் என்று பொதுமக்கள், தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com