தீபாவளிக்கு கணவர் புத்தாடை வாங்கித் தராததால் பெண் தற்கொலை

தீபாவளிக்கு கணவர் புத்தாடை வாங்கித் தராததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

திருபுவனை:

திருபுவனை சின்னபேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், பெயிண்டர். இவரது மனைவி மனோரஞ்சிதம் (வயது 27). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள வெங்கடேசன் சரியாக வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து வந்தார். இதனால் குடும்பத்தை நடத்த மனோ ரஞ்சிதம் சிரமப்பட்டு வந்தார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கித் தருவது தொடர்பாக நேற்று கணவன் - மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த மனோரஞ்சிதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com