தாரமங்கலம் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

தாரமங்கலம் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

தாரமங்கலம்:

தாரமங்கலம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஆரூர்பட்டி பனங்காட்டுமேடு பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் (வயது 22), தாரமங்கலம் எஸ்.கே.காம்பளக்ஸ் பகுதியை சேர்ந்த கதிரவன் (28) ஆகியோர் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்றதை போலீசார் கண்டுபிடித்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com