தண்டராம்பட்டு அருகே பஸ் மோதி மூதாட்டி பலி

தண்டராம்பட்டு அருகே பஸ் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

தண்டராம்பட்டு:

தண்டராம்பட்டு அருகில் உள்ள ரா.அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி கோமளவள்ளி (வயது 65). இவர் நேற்று முன்தினம் அதே ஊரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பி ரோட்டின் ஓரம் நடந்து வந்த போது பின்னால் வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com