

தேன்கனிக்கோட்டை:
தளி அருகே உள்ள சின்ன கோடிப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 42). லாரி டிரைவர். இவர் குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முனிராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.