ஓச்சேரி அருகே ஆசிரியை திடீர் மாயம்

ஓச்சேரி அருகே ஆசிரியை திடீரென மாயமானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
மாயம்
மாயம்
Published on

காவேரிப்பாக்கம்:

ஓச்சேரியை அடுத்த மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தர்மநீதி கிராமத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். 24-ந்தேதி வழக்கம்போல் கல்லூரிக்குப் போவதாகக் கூறி விட்டுச் சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. அவர் திடீரென மாயமாகி விட்டார். அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் காணவில்லை.

இது குறித்து பெண்ணின் தந்தை அவளூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான ஆசிரியையை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com