சையது முஸ்தாக் அலி கிரிக்கெட் - தமிழ்நாடு அணிக்கு 152 ரன்கள் வெற்றி இலக்கு

சையது முஸ்தாக் அலி கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான இறுதி போட்டியில் கர்நாடகா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.
கர்நாடகா அணி வீரர்கள்
கர்நாடகா அணி வீரர்கள்
Published on

புதுடெல்லி:

சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான அகில இந்திய 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு நடப்பு சாம்பியன் தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் தகுதி பெற்று இருந்தன.

இறுதிப்போட்டி டெல்லியில் இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது. தமிழக அணி கேப்டன் விஜய் சங்கர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். 5.1 ஓவர்களில் 32 ரன் எடுப்பதற்குள் கர்நாடகா அணியின் 3 விக்கெட்டை தமிழக வீரர்கள் கைப்பற்றினர்.

இதனையடுத்து 20 ஓவர் முடிவில் கர்நாடகா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக மனோகர் 46 ரன்கள் எடுத்தார். தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி விளையாடி வருகிறது. தற்போது வரை தமிழக அணி 1 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய ஹரி நிசாந்த் 12 பந்துகளில் 23 ரன்களை எடுத்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com