காரைக்காலில் கான்பெட் ஊழியர்கள் நூதன போராட்டம்

காரைக்காலில் கடந்த 10 மாதமாக மூடி கிடைக்கும் கான்பெட் பெட்ரோல் விற்பனை நிலையத்தை திறக்க வலியுறுத்தி கான்பெட் ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

காரைக்கால்:

காரைக்காலில் கடந்த 10 மாதமாக மூடி கிடைக்கும் கான்பெட் (புதுச்சேரி மாநில கூட்டுறவு நுகர்வோர் இணையம்) பெட்ரோல் விற்பனை நிலையத்தை திறக்க வலியுறுத்தி கான்பெட் ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 5-ம் நாளான நேற்று அரை நிர்வாண நூதன போராட்டத்தை நடத்தினர்.

போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார். காரைக்கால் பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் ஜெய்சிங், பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன், துணைத் தலைவர் அய்யப்பன், காரைக்கால் நகராட்சி ஊழியர் சங்க தலைவர் சண்முகராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com