தேவகோட்டையில் தெரு நாய் கடித்து 4 சிறுவர்கள் படுகாயம்

தெரு நாய் கடித்து பலத்த காயமடைந்த சிறுவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்கள்.
சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்கள்.
Published on

தேவகோட்டை:

தேவகோட்டை நகரில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இந்த தெரு நாய்கள் மாடு ஆடுகளை கடித்து வந்தது.

கீழ குடியிருப்பு அருகே வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த ரமேஷ் மகன் தஸ்வின் (வயது 5), குழந்தைச்சாமி மகன் கவுசிக் ராஜா (5), செல்லத்துரை மகன் கோகுல் (5), செந்தில்குமார் மகன் குரு சிவா (6) ஆகிய 4 பள்ளி மாணவர்களை தெரு நாய் கை, கால், இடுப்பு, தொடை பகுதியில் கடித்து குதறியது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து சென்று நாய்களை அடித்து விரட்டி குழந்தைகளை காப்பாற்றினர். பலத்த காயமடைந்த குழந்தைகளை பெற்றோர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தனர்.

மேலும் சிறிது நேரத்தில் குழந்தைகளை காப்பாற்றாமல் விட்டிருந்தால் நாய்கள் கடித்து குதறி விபரீதம் ஏற்பட்டு இருக்கும் என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com