சீர்காழி அருகே மதுக்கடையின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு

சீர்காழி அருகே மதுக்கடையின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடவாசல் கிராமத்தில் மதுக்கடை ஒன்று உள்ளது. அந்தகடையின் மேற்பார்வையாளராக நாகராஜ் என்பவர் உள்ளார். அவர், நேற்று மதுக்கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கள்ளாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.850 மதிப்பிலான 3 மது பாட்டில்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து நாகராஜ் கொடுத்த புகாரின்பேரில் புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com