சிங்கம்புணரி அருகே பெயிண்டர் தற்கொலை

சிங்கம்புணரி அருகே பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

சிங்கம்புணரி:

சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியை சேர்ந்தவர் ரவி என்ற பழனியாண்டி (வயது 52). பெயிண்டர். இவர் நேற்று காலை 7 மணி அளவில் அரசினம்பட்டி அருகே ஒரு புளியமரத்தில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து சிங்கம்புணரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக பழனியாண்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இறந்த பழனியாண்டிக்கு சீதா என்ற மனைவியும், ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இது குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com