

சோழவந்தான்:
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 60). இவர் நேற்று வீட்டின் அருகே உள்ள புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி பாண்டியம்மாள் விக்கிரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.