கடல் சீற்றம்- வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் தினந்தோறும் பரபரப்பாக காணப்படும் கடற்கரைகள் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
கடல் சீற்றம்
கடல் சீற்றம்
Published on

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறு காட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் வானவன் மகாதேவி, மணியன்தீவு, கோடியக்கரை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இன்று கடலில் கடும் காற்று மற்றும் கடல் சீற்றம் காணப்படுவதால் 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

மீன்பிடிக்க செல்லாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பத்திரமாக நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் தினந்தோறும் பரபரப்பாக காணப்படும் கடற்கரைகள் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com