சாத்தூரில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

சாத்தூரில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

சாத்தூர்:

சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் முரளிதரன் (வயது22). இவர் கேட்டரிங் படித்து முடித்து உள்ளார்.

கேட்டரிங் வேலை கிடைக்காததால் முரளிதரன் கடந்த ஒரு ஆண்டாக சாத்தூரில் கிளீனராக வேலை பார்த்து வந்து உள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்து உள்ளார். ஆஸ்பத்திரியில் சென்று சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த முரளிதரன் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார்.

அதன்படி சம்பவத்தன்று சாத்தூர் வந்த முரளிதரன் தண்டவாளத்தில் அந்த வழியாக வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்தார். இதில் ரெயில் மோதியதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி சரக ரெயில்வே போலீசார் முரளிதரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த தற்கொலை குறித்து வழக்குபதிவு செய்து தூத்துக்குடி சரக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com