ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

ஈரோடு:

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகை வர இருப்பதால், ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் பி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ்.சிவசங்கர், மாநில துணைத்தலைவர் ஜெ.பாஸ்கர்பாபு முன்னிலை வகித்தனர். இதில் ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் மகேஷ் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com