

ரிலையன்ஸ் பவுன்டேஷன் தலைவர் நீட்டா அம்பானி மற்றும் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தரேயா ஹோசபலே ராமர் கோயில் புகைப்படத்துடன் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தின் கீழ் “Rashtriya Swayamsevak Sangh ke Mahasachiv Uttar Pradesh Dattatreya Hosabale” என எழுதப்பட்டுள்ளது.
விரைவில் நடைபெற இருக்கும் உத்திர பிரதேச மாநில தேர்தலையொட்டி நீட்டா அம்பானி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. "ராமர் பெயரில் மோசமான அரசியல்," எனும் வாசகங்களுடன் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.
வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், வெவ்வேறு புகைப்படங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. நீட்டா அம்பானி தத்தரேயா ஹோசபலேவை சந்தித்ததே இல்லை என ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.