ராயக்கோட்டை அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் விவசாயி கைது

ராயக்கோட்டை அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் விவசாயியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

ராயக்கோட்டை:

ராயக்கோட்டை அருகே உள்ள பிள்ளையார் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். விவசாயி. இவரது மனைவி விஜயசாந்தி (வயது 22). கடந்த 8.8.2020 அன்று குடும்ப பிரச்சினை காரணமாக அவர் வீட்டில் உள்ள குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விஜயசாந்தியின் தாய் முனியம்மா ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை வரதட்சணை கேட்டு கொடுமை செய்தனர். இதனால் மன உளைச்சல் அடைந்த தனது மகள் தற்கொலை செய்து விட்டதாக கூறியிருந்தார். இந்த நிலையில் திருமணம் ஆகி 5 ஆண்டில் விஜயசாந்தி இறந்திருந்ததால் இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கை தற்கொலைக்கு தூண்டிய வழக்காக ராயக்கோட்டை போலீசார் மாற்றினர். இதைத்தொடர்ந்து கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஓசூர் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com