

ராயக்கோட்டை:
உத்தனப்பள்ளி அருகே உள்ள சிக்கேகவுண்டனூரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 30). அதே பகுதியை சேர்ந்தவர் பீமன். இவர்களுக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுதொடர்பாக இருதரப்பினரும் உத்தனப்பள்ளி போலீசில் புகார் செய்தனர்.
அதன் பேரில் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.