ஈரோட்டில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

ஈரோடு:

ரெயில்வே துறையை தனியார் மயமாக்கக்கூடாது. இரவுநேர வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பணப்பலன்களை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு ரெயில் நிலையத்தில் ரெயில்வே டிரைவர்கள் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்துக்கு சங்க ஈரோடு கிளை தலைவர் செபில் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் பிரகாஷ், மண்டல ஒருங்கிணைப்பாளர் மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ரெயில்வே ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com