மாமியாரை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை- புதுவை கோர்ட்டு தீர்ப்பு

தகராறில் மாமியாரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி. இவரது மனைவி அபூர்வம் (வயது 65). இவர்களது மூத்த மகன் பாலசந்தர். கடந்த 2016-ம் ஆண்டு வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி வள்ளி (27). பாலச்சந்தரின் தம்பிக்கு அப்போது பெண் பார்த்து வந்தனர். இதற்கிடையே வள்ளி தனது கணவர் வெளிநாட்டில் இருப்பதால் அவர் வந்த பின்பு தான் திருமணம் நடந்த வேண்டும் என்று கூறினார்.

இந்த நிலையில் 29-4-2016 அன்று வள்ளிக்கும், அவரது மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது மாமியாரை தாக்கினார். இதில் அபூர்வம் மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வள்ளி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அபூர்வத்தை சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அபூர்வம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வள்ளியை கைது செய்தனர். இந்த வழக்கு புதுச்சேரி 2-வது மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சுபா அன்புமணி தலைமையில் நடைபெற்று வந்தது.

வழக்கில் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட வள்ளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சுபா அன்புமணி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பெருமாள் ஆஜரானார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com