திருபுவனை அருகே தனியார் கம்பெனி காவலாளி மர்ம மரணம்

திருபுவனை அருகே தனியார் கம்பெனி காவலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

திருபுவனை:

திருபுவனை அருகே செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 55). இவர் திருபுவனையில் உள்ள மாத்திரை தயாரிக்கும் தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலைசெய்து வந்தார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒருமகனும் உள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று கொத்தபுரிநத்தம் செல்லும் சாலையில் உள்ள அய்யனார் கோவில் அருகே மர்மமான முறையில் குணசேகரன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று குணசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குணசேகரன் மர்ம சாவு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com