நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஜனாதிபதி
நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஜனாதிபதி

3ம் ஆண்டு நினைவு தினம்- வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி மரியாதை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
Published on

புதுடெல்லி:

பா.ஜனதா தலைமையிலான அரசின் முதல் பிரதமரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந் தேதி தனது 93-வது வயதில் மரணம் அடைந்தார். அவரது 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள். அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகள், பா.ஜனதா தலைவர்கள், நிர்வாகிகள் ஆகியோரும் சென்று மரியாதை செலுத்தினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com