சைக்கிள் மீது மொபட் மோதி முதியவர் பலி

சைக்கிள் மீது மொபட் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

பூந்தமல்லி:

பூந்தமல்லி கந்தசாமி நகர், கோபாலபுரத்தை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 85). இவர், தனது சைக்கிளில் பூந்தமல்லி-டிரங்க் சாலையில் பார்வையற்றோர் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பூந்தமல்லியை சேர்ந்த சத்யபிரியா (21) என்பவர் ஓட்டிவந்த மொபட் முதியவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிவலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். சத்யபிரியா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com